ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நான் அதிர்ஷ்டத்தால் நடிகையானேன்; தோல்வி பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன், என்று நடிகை டாப்ஸி கூறியுள்ளார். ஆடுகளம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை டாப்ஸி. தற்போது தெலுங்கு, தமிழ் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறார். சினிமாத்துறை அனுபவங்கள் குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமா மேல் எனக்கு சிறுவயதில் இருந்தே மோகம். படம் என்றாலே பைத்தியம் ஆகிவிடுவேன். ஒரு படம் விடாமல் பார்ப்பேன். இப்போது நடிகையாகி விட்டேன். இதை அதிர்ஷ்டம் என்றுதான் சொல்வேன்.
இப்போது தெலுங்கில் இருபடங்கள் கைவசம் உள்ளன. தமிழில் முனி-3 படத்தில் நடிக்கிறேன். இந்த ஆண்டு சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டேன். படங்கள் தோல்வி பற்றி கவலைப்பட மாட்டேன். ஹிட் படங்கள் கொடுக்காவிட்டாலும் படவாய்ப்புகள் வருகின்றன. எத்தனையோ திறமைசாலிகள் படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாமல் வெளியே இருக்கின்றனர். இந்த துறைக்கு வந்ததே போதும். எனக்கு தைரியம் அதிகம். பிரச்சினைகளை பார்த்து துவண்டுவிட மாட்டேன். தைரியமாக எதிர்கொள்வேன். அடிமட்டத்தில் இருந்து இந்த நிலைமைக்கு உயர்ந்து இருக்கிறேன். எதற்கும் பயம் இல்லை, என்று கூறியுள்ளார்.