ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
""பகல்ல பாத்துப்பேசாதவனும்...! ராத்திரி சத்தமா பேசுபவனும் வாழ்க்கையில... உருப்பட்டதா சரித்திரம், பூகோளம், ஹிஸ்டரி, ஜியாக்ரபி எதிலேயும் இல்ல. என்னடா புரியுதா...?, என்ற வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி நடிகர் வையாபுரி, நடித்து காட்டி விட்டு "டேக் ஓ.கே ஆனதும் ஹாயாக... நாற்காலியில் வந்து அமர்ந்தார். தேனி மாவட்டத்தை சேர்ந்த வையாபுரி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என 300 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். மதுரை அருகே தமிழ் சினிமா ஒன்றின் ஷூட்டிங்கில் கலகலப்பாக இருந்தார். நமது கலாய்ப்புக்கும் ஈடுகொடுத்து பதிலளித்தார்.
* உங்களை கவர்ந்த காமெடி நடிகர்?
கவுண்டமணி. அவரது டைமிங் ஜோக்... யாராலும் முடியாது.
* அப்போ, வடிவேலை பிடிக்காதா?
யார் சொன்னா? கேரக்டருக்கு ஏற்றாற்போல் தன்னையே மாற்றி கொள்ளும் திறமை வடிவேலிடம் உண்டு.
* நீங்கள் நடித்து ரசித்த காமெடி?
"துள்ளாத மனமும் துள்ளும் படம், என்னை அடையாளம் காட்டியது.
* நட்பு அடிப்படையில் வடிவேலு, சிங்கமுத்துவை மீண்டும் இணைத்து வைக்க முயற்சிப்பீர்களா?
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.
* பிடித்த காமெடி நடிகை?
கோவை சரளா.
* மதுரையை மையமாக வைத்து சினிமா எடுக்கின்றனரே?
"மதுரையை சுற்றின கழுதை எங்கும் போகாது என்பார்கள். ராசி, யோகம் கருதி மதுரையை மையமாக வைத்து சினிமா எடுக்கின்றனர்.
* அப்போ... மதுரையில் ஷூட்டிங் எடுக்கறவங்கள... கழுதைன்னு சொல்றீங்களா (ச்சும்மா... கலாய்ச்சோம்)?
ஒய் திஸ் கொல வெறி?
* இளம் காமெடி நடிகர்களுக்கு உங்களது அட்வைஸ்?
நடிக்கும் முன் வசனத்தை "படி, படித்த பின் நன்றாக "நடி, நடிக்க வராவிட்டால் டைரக்டரிடம் வாங்கு "கடி,
* என்ன திடீரென விஜய டி.ராஜேந்தர் மாதிரி அடுக்குமொழி வசனம் பேச ஆரம்பிச்சுடீங்க?
ச்சும்மா... உங்கள கலாய்ச்சேன்... ஹி...!ஹி...!!ஹி...!!!
* ஹீரோ ஆக ஆசை இல்லையா...?
இதுவரைக்கும் பேட்டி நல்லாத்தானே போய்கிட்டு இருந்துச்சு...? ஏன் உங்களுக்கு இந்த கொலை வெறி?
கண்கள் சிவக்க... புருவங்கள் சிலிர்க்க... நாற்காலியை பின்னுக்கு தள்ளி, விருட்டென எழுந்தவர் "ஆள விடுங்க சாமி என்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நடையை கட்டினார்.