ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஸ்டிரைக், வேலை நிறுத்தம் என்ற வார்த்தைகள் எவ்வளவு வேதனையானவை என்பது அதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்குத்தான் தெரியும். அதிலும் பல கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் திரையுலகத்தில் இப்படி வேலைநிறுத்தம் ஏற்பட்டால் அதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுபவர்கள் பல்லாயிரம் பேர்.
நஷ்டப்பட்ட தயாரிப்பாளர்கள்
ஜிஎஸ்டி விதிப்பை எதிர்த்து கடந்த ஜுலை மாதம் எந்த விதமான முன்னறிவிப்பும் இல்லாமல் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களை மூடினார்கள். அப்போது ஜுன் மாதம் 30ம் தேதி வெளியான திரைப்படங்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்தன. ஒரு வாரத்திற்குள்ளாக வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து மீண்டும் தியேட்டர்களைத் திறந்தாலும், பாதிப்படைந்த படங்கள் வசூலில் மீள முடியவில்லை. அதற்கு முன்னதாக ஜுன் 23ம் தேதி வெளியான படங்களும் பாதிப்படைந்தன. அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களைக் கேட்டால் அவர்களது நஷ்டங்களைப் பற்றி அவ்வளவு பேசுவார்கள்.
மீண்டும் ஒரு ஸ்டிரைக்?
ஜிஎஸ்டி விதிப்பு சமயத்திலேயே கேளிக்கை வரி பிரச்சனையும் எழுந்தது. மூன்று மாதங்கள் கழித்து தமிழக அரசு 10 சதவீத கேளிக்கை வரி விதிக்கப்படும் என்று அறிவித்தது. அதனால் மீண்டும் ஒரு ஸ்டிரைக் உருவாகும் நிலைமை தற்போது வந்துள்ளது. நாளை மறுநாள் அக்டோபர் 6ம் தேதி சுமார் 10 படங்கள் வரை வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவிப்புகளை வெளியிட்டு, தியேட்டர்களையும் பதிவு செய்து வந்தார்கள். இந்த சூழ்நிலையில் நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அக்டோபர் 6ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.
தீபாவளி படங்களும் பாதிக்கும்
இதனால், அக்டோபர் 6ம் தேதி வெளியாக உள்ள படங்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும். அதிலும், களத்தூர் கிராமம், திட்டி வாசல், விழித்திரு ஆகிய படங்கள் சில முறை வெளியீடு தள்ளி வைக்கப்பட்ட படங்கள். அவை மீண்டும் ஒரு தள்ளிவைப்பை சந்திக்க நேர்ந்தால் அந்தத் தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும். இன்னும் இரண்டு வாரங்களில் தீபாவளி வர இருப்பதால் வரும் வாரங்களில் வெளியாகும் படங்களுக்கும் இதனால் பாதிப்பு வரலாம்.
தடுமாற்றத்தில் தமிழ் சினிமா
பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினரும் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அவர்களின் ஒட்டு மொத்த முடிவு இரண்டொரு நாளில் தெரிய வரும். மீண்டும் ஒரு ஸ்டிரைக் நடைபெறும் பட்சத்தில் ஏற்கெனவே பைரசி, ஜிஎஸ்டி வரியால் கட்டண உயர்வு என தடுமாறி வரும் தமிழ்த் திரையுலகம் மீண்டும் ஒரு தடுமாற்றத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது.
ஒற்றுமை தேவை
தயாரிப்பாளர் சங்கம், திரையுலக கூட்டமைப்பு, வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம், பிலிம் சேம்பர் என சில சூழ்நிலைகளால் தனித் தனியாக முடிவெடுத்து வருபவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு நிலையை உருவாக்கினால் மட்டுமே இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.