ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் அனுஷ்கா நேற்று சென்னை வந்தார். அவர் நடித்துள்ள ருத்ரமாதேவி படம் வருகிற 9ந் தேதி வெளிவர இருக்கிறது. இந்த படத்தில் அனுஷ்கா நிஜமான தங்க நகைகள் அணிந்து நடித்தார். இதனை சென்னையில் உள்ள என்.ஏ.சி ஜூவல்லரி நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது. அதனை பொதுமக்களும் வாங்கும் வகையில் விற்பனைக்கும் கொண்டு வருகிறது. இந்த நகைகளை அனுஷ்கா அறிமுகப்படுத்தினார். பின்னர் அவர் நமக்கு அளித்த சிறப்பு பேட்டி:
* ருத்ரமாதேவியாக நடித்திருக்கிறீர்கள். உங்களுக்கு ருத்தரமாதேவி பற்றித் தெரியுமா?
நிஜமாகவே சொல்கிறேன் படத்தில் நடிக்கும் முன் தெரியாது. பெயர் மட்டும் கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் ஒரு வீரமான ராணி என்கிற அளவில்தான் தெரியும். ருத்ரமாதேவியில் நடிப்பது என்று முடிவானதும். இயக்குனர் குணசேகரன் சார் நிறைய புத்தகங்கள் கொண்டு வந்து தந்தா£ர் அவற்றை படித்து அவரை பற்றி முழுமையான தெரிந்து கொண்டு நடித்தேன். 13ம் நூற்றாண்டிலேயே பெண்கள் எந்த அளவுக்கு அடிமைகளாக நடத்தப்பட்டிருக்கிறார்கள். ருத்ரமாதேவி எந்த அளவிற்கு போராட்டங்களை சந்தித்திருக்கிறார் என்பதை படித்து மெய்சிலிர்த்து போனேன்.
* அடுத்து யாராக நடிப்பீர்கள்?
சினிமாவை பற்றி உங்களுக்கு தெரியுமே ஒரு கேரக்டர் பாப்புலராகிவிட்டால் அதுபோன்ற கேரக்டர்களே தொடர்ந்து வரும். எனக்கும் நிறைய சரித்திர கதைகள் வந்தது. வந்து கொண்டும் இருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். படத்தை அவர்களால் எடுத்து முடிக்க முடியுமா என்றும் பார்க்க வேண்டும். முன்பு எனக்கு சரிதிரம் படிப்பதில் பெரிய ஈடுபாடு இல்லை. இப்போது நிறைய படிக்கிறேன். எனக்கான கேரக்டர்கள் அமையும்போது நடிப்பேன்.
* ருத்ரமாதேவியில் ஒரிஜினல் தங்க நகை அணிந்து நடித்திருக்கிறீர்களாமே?
ஒரு ஆச்சர்யம் பாருங்க. எனக்கு பெருசா நகை போட்டுக்க பிடிக்காது. காதுல ஒரு கம்மல், கழுத்துல சின்னதா ஒரு செயின் இதுதான் நான் அணியும் நகைகள் ஆனால் ருத்ரமாதேவியாக நடிக்கும்போது சுமார் 3 கிலோ தங்க நகைகள் அணிந்து நடித்தேன். மொத்தம் 15 கிலோ தங்கத்தில் நகைகள் செய்ததாகவும், அவை 5 கோடி மதிப்புள்ளது என்று என்.ஏ.சி நிறுவனத்தார் சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது. ஒரிஜினல் தங்க நகை அணிந்து நடித்தது அழகாக இருந்தாலும் சண்டை காட்சிகளில் நடிக்கம்போது மிகவும் சிரமப்பட்டேன். எனக்கும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது. எதிரே சண்டை போடுகிறவருக்கும் காயம் ஏற்பட்டு விடக்கூடாது. நகையும் சேதமடைந்து விடக்கூடாது இந்த மூன்றையும் கவனித்து சண்டை போட வேண்டியது இருந்து.
* யானை, குதிரையெல்லாம் பிரண்டாகி விட்டதாமே?
ருத்ரமாதேவி சரித்திர படம் என்பதால் குதிரையேற்றம், யானை சவாரி, அவைகள் மீது அமர்ந்து கொண்டே சண்டை என நிறைய விஷயங்கள் இருந்தது. வாள் சண்டையை முறைப்படி கற்றுக் கொண்டேன். வாள் சண்டையின் அசைவுகளுக்கும் யோகாவுக்கும் தொடர்பு இருப்பதால் எளிதாக கற்றுக் கொள்ள முடிந்தது. லட்சுமி என்ற யானையுடன் பழகி அதனை கட்டுப்படுத்த கற்றுக் கொண்டேன். யானையை விட குதிரையோடு பழகுவதுதான் சிரமமாக இருந்து. பலமுறை கீழே தள்ளிவிட்டிருக்கிறது. யானை தள்ளி விட்டால் என்னாகும் யோசிச்சு பாருங்க. ஆனால் தள்ளி விடாது அது தெய்வ அம்சம் பொருந்தியது.
* பாகுபாலி 2ம் பாகம், சிங்கம் 3 பாகம் என அடுத்துடுத்து நடிப்பது பற்றி...?
நான் நடித்த இந்த படங்கள் அடுத்தடுத்த பாகத்துக்கும் தகுதியாகியிருப்பது சந்தோஷமான விஷயம்தானே. வெற்றி பெற்றவர்களுடன் மீண்டும் மீண்டும் இணைந்து பணியாற்றும்போது சந்தோஷமாக இருக்கிறது.
* இஞ்சி இடுப்பழகிக்கு திடீரென குண்டாகிவிட்டீர்களே?
கதை அப்படி. எனக்கு பிடித்த படங்களில் இஞ்சி இடுப்பழகியும் ஒண்ணு. பாகுபலி, ருத்ரமேதேவி அளவுக்கு இஞ்சி இடுப்பழகிக்கு சிரமப்படவில்லை. நான் யோகா மாஸ்டர் என்பதால் உடல் எடையை கூட்டுவதும், குறைப்பதும் ஒன்றும் பெரிய விஷயவில்லை. என்னை பொருத்தவரை மனதை கட்டுப்படுத்த தெரிந்தால் உடம்பையும் கட்டுப்படுத்த முடியும். சிம்பிள் லாஜிக் இது.
* ஆர்யாவுடன் திருமணம் என்கிறார்களே?
பேட்டி நல்லாத்தானே போய்கிட்டு இருந்தது. நான் யாரோட சேர்ந்து நடிச்சாலும் அவரை காதலிக்கிறதா நீங்களே எழுதிக்கிறீங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்க போறீங்களான்னு நீங்களே கேட்குறீங்க. இந்த லிஸ்ட்டுல இப்போ ஆர்யா சேர்ந்திருக்கார். நல்ல வேளை ராணாவை மட்டும் நான் பிரதர்னு கூப்பிடுறதால தப்பிச்சார். கண்டிப்பாக நானும் திருமணம் செய்து கொள்வேன். கையில் இருக்கும் படங்களையும், இப்போது பேசிக்கொண்டிருக்கும் படங்களை முடிக்கவுமே மூணு வருஷத்துக்கு மேலாகும். அதற்கு பிறகு கல்யாணம் பற்றி யோசிக்கலாம்.
* உங்களை தென்னகத்து லேடி சூப்பர் ஸ்டார் என்கிறார்களே?
இதெல்லாம் பெரிய வார்த்தைங்க. அதுக்கு தகுதியானவங்க நிறைய பேர் இருக்காங்க. எப்போதும் என்னை அனுஷ்கான்னு பெயர் சொல்லியோ, அல்லது ஸ்வீட்டின்னு என் ஒரிஜினல் பெயரிலேயோ அழைக்கப்படுவதைத்தான் விரும்புறேன்.
ஆள் ஆறடி உயரமாக இருந்தாலும், அழகின் உயரத்தில் இருந்தாலும் அடக்கமாகவே இருப்பதுதான் அனுஷ்கா ஸ்பெஷல்.