ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஒரு பெண்ணின் திருமணத்துக்கு தகுதியான வயது 21 என்று மருத்துவமும், அரசும் சொல்கிறது. பணி நிமித்தம், குடும்ப கடமைகள் நிமித்தம், சூழ்நிலைகள் நிமித்தம் கொஞ்சம் தள்ளிபோனால்கூட 25 முதல் 27 வயதுக்குள் ஒரு பெண் திருமணம் செய்து கொள்வதுதான் நமது சமூக சூழலுக்கு ஏற்றது. பெரும்பாலான நடிகைகளின் திருமண வயது மேற்கண்டவற்றுக்குள் இருக்கிறது. ஆனால் ஒரு சில நடிகைகள் 30 வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பதை பார்க்கும் முன் அப்படி தயங்கி நிற்கும் ஒரு சில நடிகைகள் பற்றி பார்த்து விடலாம்.
அனுஷ்கா: 33 வயதாகும் அனுஷ்கா தோற்றத்தில் கூட முதிர்ச்சி அடைந்து விட்டாலும் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. 2005ம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை சுமார் 40 படங்களில் நடித்து முடித்துவிட்டார். அருந்ததி, பாகுபலி, ருத்ரமாதேவி படங்களின் மூலம் சம்பளத்திலும், புகழிலும் உச்சத்தை தொட்டு விட்டார்.
த்ரிஷா: 32 வயதாகும் த்ரிஷா தோற்றத்தில் இன்னும் 20ஐ தாண்டவில்லை என்பது கடவுள் அவருக்கு கொடுத்திருக்கும் அழகு வரம். 1999ல் அறிமுகமாகி 50 படங்களில் நடித்து முடித்து விட்டார். இரண்டு மூன்று காதல்கள் அவர் வாழ்க்கையில் வந்து போயிருக்கிறது. கடைசியில் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் வரை சென்று முறிந்து விட்டது. "திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதுதான் பெஸ்ட்" என்று இப்போது தத்துவம் பேச ஆரம்பித்திருக்கிறார்.
நயன்தாரா: 30 வயதாகும் நயன்தாராவுக்கு தோற்றதில் சிறிது முதிர்ச்சி வந்துவிட்டாலும் ரசிகர்களுக்கு ஏனோ அவர் சலிக்கவில்லை. அதுதான் அவரது பலம். 2003ம் ஆண்டு அறிமுகமாகி 42 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். நடிப்பில் என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஸ்ரீராமராஜ்யம் படத்தில் சீதையாக நடித்தது, அனாமிகா படத்தில் நடித்தது இப்படி ஒரு சில படங்களைத்தான் அவரது நடிப்புக்கு உதாரணம் சொல்ல முடியும் ஆனால் கமர்ஷியல் ஹீரோயினாக இப்போதும் 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
காஜல் அகர்வால்: 30 வயதாகும் காஜல் அகர்வால் இப்போதும் அழகு குறையாத காஷ்மீர் ஆப்பிள்தான். தங்கைக்கு திருமணம் செய்து வைத்துவிட்டார். 2004ல் அறிமுகமாகி 30 படங்களில் நடித்திருக்கிறார். 6 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
நமீதா: 34 வயதாகிறது நமீதாவுக்கு. அழகு குறையவில்லை என்றாலும் உடல் பருமனாகி அந்த அழகை அழுத்தி வைத்திருக்கிறது. 2002ல் அறிமுகமாகி 43 படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கையில் படம் எதுவும் இல்லை. ஆனாலும் எப்படியும் உடம்பை குறைத்து மீண்டும் நடிக்கும் முயற்சியில் இருக்கிறார்.
ஸ்ரேயா சரண்: 32 வயதாகும் ஸ்ரேயாவுக்கு உடம்பிலும், முகத்திலும் முதிர்ச்சி தெரிய ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து நடிப்பேன் என்று பிடிவாதத்துடன் இருக்கிறார். 2001ல் அறிமுகமாகி 40 படங்களில் நடித்து விட்டார்.
இந்த பட்டியலில் நீத்து சந்திரா, சதா, பூனம் கவுர் என நீண்டுகொண்டே போகும்... 30 வயதை கடந்தும் நடிகைகள் திருமணம் செய்து கொள்ள தயங்குவதற்கு மிக முக்கிய காரணமே... திருமணம் செய்து கொண்டுவிட்டால் மீண்டும் ஹீரோயினாக நடிக்க முடியாது என்பதுதான். ஹீரோயினாக நடிக்காவிட்டால் பெரிய சம்பளம் கிடைக்காது. திருமணமான நடிகைகளின் அழகை ரசிக்க விரும்பாத ரசிகனின் மனோபாவமே இதற்கு காரணம்.
இன்னும் சிலருக்கு குடும்பத்தினர் வற்புறுத்தல். பணம் காய்க்கும் மரமாக நடிகைகளை அவர்கள் கருதுவதால் தொடர்ந்து அவர்களை நடிக்க வற்புறுத்துகிறார்கள். யாருடனாவது காதல் வந்தால்கூட அதை பிரித்து விடுகிறார்கள். இந்த சூழலில் சிக்கும் நடிகைகள்தான் கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் குடும்பத்திற்காக உழைத்து கடைசியில் அதரவற்று தனது இறுதி காலத்தை தள்ளிக் கொண்டிருப்பார்கள்.
சில நடிகைகள் பணம், புகழ்கொண்ட பரபரப்பான வாழ்க்கைக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அவர்களால் கணவன், குடும்பம், மாமனார், மாமியார் என்கிற உறவு கூட்டுக்குள் தங்களை நுழைத்துக் கொள்ள முடிவதில்லை. எல்லாவற்றையும் விட ஏதேதோ காரணங்களால் அவர்கள் 40 வயதை நெருங்கிவிட்டாலோ, அல்லது கடந்து விட்டாலோ திருமண ஆசையே போய்விடுகிறது. தாம்பத்திய வாழ்க்கை குறித்த பயம் வந்து விடுகிறது.
ஒவ்வொரு பெண்ணுக்கும் வாழ்க்கைதான் முக்கியம். சினிமா என்பது அந்த வாழ்க்கையின் ஒரு பகுதிதான். என்பதை நடிகைகள் உணர வேண்டும். பல இளம் நடிகர்கள் திருணம் செய்து கொண்டபிறகுதான் நடிக்க வருகிறார்கள் என்பதையும், புகழின் உச்சியில் இருக்கும்போதும் உரிய வயதில் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதையும் அவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
வாழ்க்கைக்குதான் சினிமாவே தவிர சினிமாவுக்காக வாழ்க்கையில்லை என்பதில் தெளிவு வேண்டும்.