ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மெட்ராஸ் வெற்றிக்கு பின், பிசியாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறார் கார்த்தி. பருத்தி வீரனுக்கு பின், கொம்பனாக மீண்டும் கிராமத்து அவதாரம் எடுத்துள்ள அவர், அந்த படத்தின் அனுபவம், அடுத்தடுத்து நடிக்கவுள்ள படங்கள் குறித்து, நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
* திரும்பவும் கிராமத்து பக்கம் போயிட்டீங்களே?
பருத்தி வீரனுக்கு பின், மீண்டும் கிராமத்து படங்களில் நடிக்க தயக்கம் இருந்தது. தொடர்ந்து கிராமத்து படங்களில் நடித்தால், கிராமத்து படங்களுக்கு தான் லாயக்கு என, முத்திரை குத்தி விடுவார்களோ என்ற பயம் இருந்தது. அதனால், வித்தியாசமான கதைக் களம் அமையும் வரை காத்திருந்தேன். கொம்பன் மூலம் அந்த வாய்ப்பு வந்தது; நடித்தேன்.
* லட்சுமி மேனன் உடன் முதல் முறையாக ஜோடியா நடிச்சிருக்கீங்களே?
ஆமாம்; அது ரொம்ப சின்ன பொண்ணு. இப்போது தான், பிளஸ் 2 தேர்வு எழுதியிருக்கு. ஆனாலும், கேரக்டரை உணர்ந்து, ரொம்ப மெச்சூரிட்டியாகவும், இயல்பாகவும் நடிக்கிறாங்க. அந்த பொண்ணு நடிப்பை பார்த்து எனக்கே ஆச்சர்யமாக இருக்கு.
* கிராமத்து கதைகளில் நடிக்கும்போது ஏற்படும் உணர்வு குறித்து...?
கிராமத்து கதைகளில், அதுவும் குடும்ப கதைகளில் நடிக்கும்போது, ரொம்ப சுகமாகவும், மனசுக்கு சந்தோஷமாவும் இருக்கும். மாவாட்டுறது, விறகு அடுப்பு எரிப்பது, சமைப்பது போன்ற விஷயங்களை எல்லாம், சினிமாவில் பார்த்தே ரொம்ப நாளாச்சே... கிராமத்து படங்களில் நடிக்கும்போது, அதை நாம் அனுபவிக்க முடியும்.
* கொம்பன் படம் ஆக்ஷ்ன் சொல்லும் படமா.?
கொம்பனு டைட்டில் வச்சிட்டு ஆக்ஷ்ன் இல்லாமல் எப்படி. ஊருக்குள்ள நியாயமான ஒரு ஆளாக இருக்கும் கேரக்டர். இவன் சொன்னால் சரியாக இருக்கும் என்று நம்புகிற ஒரு ஆளாக இருப்பான். கொம்பன் என்ற ஹீரோவுக்கான கெத்து இருக்கும். படத்தில் இவனை தொட்டால் பிரச்னைப்பா என்ற எண்ணம் படத்தில் இருக்கும்.
* அண்ணனுடன் சேர்ந்து நடிக்கும் திட்டம் உண்டா?
ரெண்டு பேரும் சேர்ந்து நடித்தால், அது ரொம்ப ஸ்பெஷல் சப்ஜெக்டா இருக்கணும். நாங்க தயார்; கதைகள் அமையணும். சவாலான விஷயங்கள் இருக்கணும். சீக்கிரமே அது நடக்கும் என நினைக்கிறேன். அண்ணன் ரூட் வேற; என் ரூட் வேற. இல்லன்னா, அவரோட யார் போட்டி போடுறது?
* ராஜ்கிரண் உங்களின் மாமனராக நடித்துள்ளாரே... அவருடன் நடித்தது உங்களின் உண்மையான மாமனாரை நினைவூட்டியதா?
ஓரிரு காட்சிகள் அப்படி இருந்தன. மற்றபடி, கொம்பன் கதை, என் நிஜ வாழ்க்கையில் நடந்த கதையில்லையே. ஆனால், மாமனார் - மருகன் இடையே, இப்படியெல்லாம் கூட அனுபவங்கள் இருக்குமா என்ற ஆச்சர்யத்தை இந்த படம் எனக்கு தந்தது என்னவோ உண்மை தான்.
* அடுத்த படங்கள் குறித்து?
காஸ்மோரா என்ற படத்தில் நடிக்கிறேன். முதல் முதலாக நான் நடிக்கும் பெரிய பட்ஜெட் படமிது. காமெடிக்கு முக்கியத்துவம் இருக்கும். அடுத்ததாக, நாகார்ஜுனாவும், நானும், தமிழ், தெலுங்கில் தயாராகும் ஒரு படத்தில் நடிக்கிறோம். இந்தியாவில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இருக்கு.
* கோவை சரளா கூட நடித்த அனுபவம்?
இந்த படம், கோவை சரளாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும். அப்படியே ஆச்சி மாதிரி நடிச்சிருக்காங்க. ஆச்சிக்கு சின்ன கவுண்டர் தான் அவங்களை சீரியசாக மாற்றி காட்டிய படம். அந்த மாதிரி சரளாம்மா, இந்தப் படத்தில் தெரிவாங்க. அடிக்கடி கோவை பாஷை வந்தாலும், டைரக்டர் கிட்ட திரும்ப திரும்ப கேட்டு, ராமநாதபுரம் பாஷையை பக்காவாக பேசினாங்க.