ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நமீதாவுக்கு பிடித்த பிரமாண்டம் எது என அவரே கூறியிருக்கிறார்.
பெருமாள், தீ, ஜெகன்மோகினி, இந்திரவிழா என படுபிசியாக இருக்கும் நமீதாவுக்கு மலையாளத்தில் வேறு எந்த நடிகையும் வாங்காத மிகப்பெரிய ஒரு தொகையை கொடுத்து, நமீதாவின் கால்ஷீட்டில் இடம்பிடித்துள்ளது கேரளா திரைத்துறை. அடுக்கடுக்கான மகிழ்ச்சியில் இருக்கும் நமீதா கூறியதாவது:-
எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன். வணிக ரீதியான வெற்றிக்கு எனது பாத்திரம் உதவும் என தயாரிப்பாளர்கள் நம்புகின்றனர். அதனால் தான், என்னை தங்களது படங்களில் அவர்கள் இணைத்துக் கொள்கின்றனர் என நினைக்கிறேன். வித்தியாசமான கதைகளில் நடிக்கவேண்டும் என்பது எனது ஆசை. அதனால்தான் பச்சக்குதிரயில் நடித்தேன். அந்தப் படம் வெற்றி பெற்றிருந்தால், விதவிதமான நமீதாவை ரசிகர்கள் பார்த்திருக்கலாம். இப்போதும் எனக்கு அந்த ஆர்வம் இருக்கிறது. எங்கு போய்விடப் போகிறது காலம், பொறுத்திருந்து விளாசுவோம்.
கன்னடம், மலையாளம் படங்களில் வாய்ப்புகள் வருகின்றன. வரும் அனைத்தையும் நான் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம், அதனால் ஏற்படும் தாமதத்தால், தமிழக இளசுகளை தவிக்க வைக்க மனசு இடம்தரவில்லை. தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி என பெயர் எடுப்பது எவ்வளவு கடினம் என்பது, எனக்கு நன்றாகவே தெரியும்.
டைரக்டர் பிரமோத் இயக்கும் மலையாளப் படம் ஒன்றில், ஒப்பந்தம் ஆகியிருக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட்டில் துவங்குகிறது. இந்தப் படத்துக்குப் பின், மலையாளத் திரையுலகில் ஹீரோயின்களின் சம்பளம் பல மடங்கு உயரும் என நம்புகிறேன்.
மனதிற்கு சோர்வாக இருக்கும்போது, என்னைப் பற்றி வெளியான கிசுகிசுக்களை அசைபோடுவேன். உண்மையை சொல்லப்போனால், உடனடி புத்துணர்வு வழங்கும் நிவாரணி எனக்கு வேறு எதுவுமில்லை. சென்னை வந்ததும் நான் முதலில் கற்றுக் கொண்ட தமிழ் வார்த்தை, வணக்கம் அண்டு மச்சான்.
அது சரி, கேள்விக்கு வருகிறோம். நமீதா என்றாலே பிரம்மாண்டம் தான் நினைவிற்கு வருகிறது. உங்களுக்குப் பிடிச்ச பிரம்மாண்டம் எது?
என்ன சொல்வேன் என நீங்கள் நினைக்கிறீர்கள் என் வீட்டைத் தவிர...? என நழுவினார் நமீதா.
- தினமலர் சினி டீம் -