விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
பேராண்மை படத்தில் ஐந்து கதாநாயகிகளில் ஒருவராக அறிமுகமானவர் வசுந்தரா. தொடர்ந்து தென்மேற்கு பருவக்காற்று, போராளி, சொன்னா புரியாது போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தானும் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்று எண்ணி தொடர்ந்து முயற்சித்து வரும் வசுந்தரா அளித்த சிறப்பு பேட்டி...
* பேராண்மை, தென்மேற்கு பருவக்காற்று, போராளி, சொன்னா புரியாது, இவ்வளவு இடைவெளி ஏன்?
சொன்னா நம்பமாட்டீங்க. நன் சிட்டில படிச்சி வளர்ந்த பொண்ணு. கொஞ்சம் புதுசா டிரை பண்ணலாம்னு நடிச்ச படம் தென்மேற்கு பருவக்காற்று. ஆளே மாறிப்போய் கிராமத்து பொண்ணா வந்து நின்னேன். ஆனா அதற்கு பிறகு வந்த எல்லா ரோலும் கிராமத்து கதைதான். போராளி படம் கொஞ்சம் வித்தியாசமான ரோல்னு ஒத்துக்கிட்டு நடிச்சேன். அதையடுத்து துணிகா துணிகா-னு தெலுங்கு படம். பிரபு சார் கூட படத்தில் இருந்தார். அந்த படத்தில் ஒரு நெகட்டிவ் ரோல். தைரியமா ஒத்துக்கிட்டு நடிச்சேன். என் நடிப்பு பேசப்பட்டது. அதையடுத்து சொன்னா புரியாது படம். காமெடி. படம் முழுக்க வர்ற கேரக்டர். என்னை பொறுத்தவரை நிறைய படங்களா நடிக்க வேணாம். நல்ல படம் 1, 2 நடிச்சாகூட போதும்.
* உங்களுக்கு எந்த மாதிரியான ரோல் செட்டாகும்னு நினைக்கிறீங்க?
எனக்கு சிட்டி லுக் உள்ள ரோல், நல்ல மாடர்ன் கேரக்டர் பளிச்சுனு செட் ஆகும்னு நினைக்கிறேன். அதைத்தான் நானும் விரும்பறேன்.
* எந்த இயக்குனர்கள் படங்களில் நடித்து, உங்கள் திறமையை வெளிக்காண்டுவர ஆசைப்படுறீங்க?
கெளதம் மேனன், மணிரத்னம் படங்களில் நடிக்கனும். இவங்க படங்களில் ஹீரோயின்களுக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். நடிப்புக்கும் நல்ல சவாலா இருக்கும்.
* இப்போது படங்களுக்கு கொஞ்சம் கிளாமர் தேவைப்படுதே, நீங்க?
கண்டிப்பா நடிப்பேன். ஆனா அது கொஞ்சம் டீசன்டா இருக்கனும். காட்சிக்கு தேவையான கிளாமர் பயன்படுத்தலாம். ஆனா, பார்க்கும்போது அறுவறுப்பு ஆகிடக்கூடாது.
* நடிகர்கள், ஹீரோயின்களுக்கு சிபாரிசு செய்றாங்களாமே, உங்களுக்கு யாரும் நடிகர்களின் நட்பு இல்லையா?
எதுக்கு நடிகர்கள் சிபாரிசு செய்றாங்கனுதான் எனக்கு புரியல. அந்த ரோல் எப்படிப்பட்டது என்று இயக்குனர்களுக்குதானே தெரியும்? முன்னாடி எல்லாம் கதைதான் ஹீரோ. ஆனா இப்போ ஹீரோதான் முக்கியம்னு ஆயிடுச்சு. இதுக்கு மேல் நான் சொல்ல விரும்பல.
* தமிழ் சினிமால இப்போ புதுமுகங்களுக்கு எந்த மாதிரியான வரவேற்பு இருக்குதுனு நினைக்கிறீங்க?
புதுமுகங்கள் இப்போது கவனிக்கப்படுறாங்க. ஒரு படம் ஹிட் ஆச்சினா, நல்ல வரவேற்பு இருக்கு. 15 பேர் அறிமுகம் ஆனா, ஒருத்தர்தான் கவனிக்கப்படுறாங்க, வெற்றி அடையுறாங்க, தொடர்ந்து படங்கள் கிடைக்குது. திறமைசாலிகளுக்கு நல்ல அடையாளம் கிடைக்கும்னு நம்பறேன்.
* நடிக்க வாய்ப்பு கேட்டு போவீங்களா? வாய்ப்பு தேடி வரும்னு காத்திருப்பீ்ங்களா?
ஒரு நல்ல ரோல், நிச்சயம் பேசப்படுற மாதிரி கதைனு கேள்விப்பட்டா, நான் போய் வாய்ப்பு கேட்பேன். ஆனா, அதைவிட படத்தின் டைரக்டர் இந்த ரோல் வசுந்தரா நடித்தா நல்லா இருக்கும்னு கூப்பிட்டு வாய்ப்பு தந்தா பெருமையா நினைக்கிறேன்.
* இதுவரை உங்க நடிப்பு பெரிதா பேசப்படலியே என்ற வருத்தம் இருக்கா?
உண்மையா இருக்கு பேராண்மை படத்துக்காக ஸ்டன்ட்ஸ் கத்துக்கிட்டேன். நிறைய சக்தி கொடுத்து, வேலை பார்த்தேன். இந்த ரோலுக்காக நிறைய பயிற்சி எடுத்து போய் நின்னேன். ஆனா படம் வந்தபிறகு, அந்த 5 பேர்ல ஒரு பொன்னு என்னு என்னை அடையாளம் காட்டினப்ப கஷ்டமா இருந்தது. அதற்கான அங்கீகாரம் எனக்கு சரியா கிடைக்கல என்ற வருத்தம் எப்பவும் இருக்கு.
* உங்களை மாற்றிக்கொள்ள நினைக்கிறீங்களா?
நான் கொஞ்சம் கூச்ச சுபாவம். இப்படி இருந்தா ஒர்க்அவுட் ஆகாதுனு நினைக்கிறேன். செட்ல கூட யார்கிட்டயும் பேசமாட்டேன். என் ஷாட் முடிந்ததும் புக்ஸ், லேப்டாப், ஐ பேடு இப்படி ஏதாவது ஒன்னோட தனியா உட்கார்ந்து நேரத்தை செலவழிப்பேன். அதிகமாக பேசமாட்டேன். பிரபு சார் கூட அட்வைஸ் பண்ணார். எல்லார்கிட்டயும் சகஜமா பேசனும் என்று. சோ, கொஞ்சம் என்னை மாத்திக்கிட்டு புது வசுந்தராவா, சீக்கிரம் வந்து நிக்கப்போறேன்.