ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கும்கி படத்தில் அறிமுகமானவர் சிவாஜியின் பேரன் விக்ரம்பிரபு. அதையடுத்து எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி என்ற படத்தில் ஆக்சன் கதையில் நடித்து முடித்து விட்ட அவர், அடுத்து தூங்காநகரம் படத்தை இயக்கிய கெளரவ் இயக்கும் சிகரம் தொடு என்ற படத்தில் நடித்து வருகிறார். மோனல் கஜார் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கோவை சரளா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
வித்தியாசமான காதல் கதையில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இமயமலையிலுள்ள ஹரித்துவார் சண்டித்தேவி கோயிலில் தொடங்கி அங்குள்ள உயரமான பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை 10 நாட்களுக்குள் நடத்தி விட்டு பின்னர், அங்கிருந்து சென்னை திரும்புகிறார்களாம்.
ஆக, ரஜினி அமைதிக்காக இமயமலை சென்றார். விஷால் சுற்றிப்பார்க்க சென்றார். விக்ரம்பிரபுவோ படப்பிடிப்புக்காக இமயமலைக்கு சென்றுள்ளார்.