ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் 3. இந்த படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் லதா ரஜினியின் உறவினர். முதல் படத்திலேயே இவர் மெட்டெடுத்த ஒய்திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ஹிட் ஆனதால் அனைவருமே அனிருத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர். அதோடு, அடுத்த ஏ.ஆர்.ரகுமான் இவர்தான் என்றெல்லாம்கூட சிலர் அவருக்கு கீ கொடுத்தனர். இதனால் அனிருத்துக்கும் அடுத்த ரகுமான் நாம்தான் என்ற எண்ணம் உச்சந்தலையில் ஏறி விட்டதாம். அந்த நெனப்புடனேதான் அதன்பிறகு தான் இசையமைத்த படங்களுக்கும் ஒர்க் பண்ணி வந்திருக்கிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் ரஜினியின் வீட்டுக்கு அனிருத் சென்றிருந்தபோது, இசையமைத்துக்கொண்டிருக்கும் படங்களைப்பற்றி கேட்டறிந்தாராம். அப்போது, எதிர்காலத்தில் இசையில் யாரை மாதிரி வர வேண்டும் என்று ரஜினி ஒரு கேள்வி வீச, ஏ.ஆர்.ரகுமான் மாதிரி வரனும்னு ஆசை உள்ளது என்றாராம். அதைக்கேட்டு, அவரை மேலும் கீழும் பார்த்த ரஜினி, ரகுமான் சினிமாவுக்கு வந்து ரொம்ப வருடமாகி விட்டது. ஆனால் இன்று வரை அவரைப்பற்றி மீடியாக்களில் எந்த தவறான செய்தியும் வந்ததில்லை. காரணம், தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருபபார். அதனால்தான் இத்தனை பெரிய வெற்றியை அவரால் அடைய முடிந்தது. ஆனால் நீ முதல் படத்துக்கு இசையமைக்கும்போதே நடிகையுடன் உன்னை இணைத்து தவறான செய்திகளும், போட்டோக்களும் வருகிறது.
மனசு நிறைய பெரிய ஆசையை வைத்துக்கொண்டு, நடிகைங்க பின்னாடி சுத்தினா எப்படி பெரிய ஆளா வர முடியும் என்று நறுக்கென்று சொன்னாராம். அதைக்கேட்டு ஆடிப்போன அனிருத். இனிமேல் நல்ல புள்ளையா இருந்து சினிமாவுல பெருசா சாதிப்பேன் என்று ரஜினியிடம் சொல்லிவிட்டு வந்தாராம்.