ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாணா காத்தாடி படம் வாயிலாக, நாயகனாக தமிழ் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்தவர், அதர்வா. தற்போது, செம போத ஆகாதே படத்தின் மூலம், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். திரையுலக பயணம் குறித்து அவருடன் பேசியதிலிருந்து...
செம போத ஆகாதே படம் பற்றி?
இயக்குனர் பத்ரி, இந்த படத்தின், 'ஒன்லைனை' மட்டுமே என்னிடம் கூறினார்; புதிதாக இருந்தது. உடனே செய்யலாம் என முடிவு எடுத்தோம். என் முதல் படத்தை பத்ரி தான் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் கூட, புகை பிடிக்க மாட்டேன். மதுவால் ஏற்படும் விளைவை இந்தப் படத்தில் சொல்லியுள்ளோம்.
சினிமாவை எந்தளவு தெரிந்து வைத்துள்ளீர்கள்?
நான் இன்னும், 100 படம் செய்தாலும், சினிமா தொடர்பான அனைத்தையும் கற்க முடியாது. பாணா காத்தாடி படத்தில் நடித்தபோது, சினிமா வேறு மாதிரி இருந்தது; இப்போது வேறு மாதிரி உள்ளது. டிஜிட்டல் பிளாட்பாரம் அதிகரித்து விட்டது. சினிமா வளர்ந்துகிட்டே இருக்கு. நாங்களும், 'அப்டேட்' ஆகிட்டே இருக்கிறோம்.
மற்ற நடிகர்களை வைத்து, படம் தயாரிப்பீர்களா?
கண்டிப்பாக அந்த ஆசை உள்ளது. தயாரிப்பு பணியை மேலும் அதிகரிக்க வேண்டும். மற்ற நடிகர்களையும் வைத்து படம் தயாரிக்க வேண்டும்.
பிரமித்து பார்க்கிற நாயகன் யார்?
தினமும் யாராவது ஒரு நடிகர் பிரமிக்க வைத்துக் கொண்டு தான் இருக்கிறார். குறிப்பாக, விஜய் சேதுபதி வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.
கல்யாணம் எப்போது?
எனக்கு திருமணத்திற்கான நேரம், இன்னும் வரவில்லை. 'கிசுகிசு' பற்றியெல்லாம் அம்மா கவலைப்பட மாட்டார். அது குறித்து வீட்டில் யாரும் பேசியதே இல்லை. எந்த விஷயத்திலும் என்னை நிர்ப்பந்திப்பதில்லை.
தோழியர் உள்ளனரா?
நான் நடித்த எல்லா நாயகியரும் எனக்கு முக்கியம் தான். மேகா, ஹன்சிகா, ப்ரியா ஆனந்த் எல்லாரும், நல்ல தோழியர் தான்.
அப்பா நடித்த படத்தின் ரீமேக்கில் நடிக்கும் எண்ணம் உண்டா?
அப்பா நடித்த, இதயம், பொற்காலம், இரணியன் போன்ற படங்களை எல்லாம், நான் செய்ய முடியுமா என தெரியாது. அவரது படம், அவருடைய படம் தான். கடந்த சில ஆண்டுகளாக, எனக்கு பிடித்த படத்தை என்னால் செய்ய முடிவது சந்தோஷமாக உள்ளது; அது போதும்.
சினிமாவில், முரளி காதல் - அதர்வா காதல் எப்படி?
அப்பா நடித்த படங்களை சினிமாவாக பார்க்கும் போது, இப்போது கூட நன்றாக இருக்கும். ஆனால், ரியாலிட்டி என வரும் போது, அப்போ இருந்த காதல், இப்போது இல்லை எனலாம். இந்த தலைமுறை மாறி விட்டது. பெண்களிடம் பேசுவது ரொம்ப சுலபமாகி விட்டது. அணுகுமுறை மாறி விட்டது. ஒருதலை காதல் குறைந்து விட்டது.