ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சின்னத்திரையில் பல சீரியல்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்த வர் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ். தற்போது வாணி ராணி, கல்யாண பரிசு சீரியல்களில் நடித்து வருகிறார்.
தினமலர் இணையதளத்திற்காக அவர் அளித்த பேட்டி...
வாணி ராணி சீரியலில் கதிர் என்ற வேடத்தில் நடித்து வருகிறேன். இந்த வேடம் ராதிகா மேடத்துடன் மோதும் அதிரடியான கதாபாத்திரம். அதனால் நேயர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச்சாகி விட்டது. முதலில் வில்லத்தனமான இருந்த அந்த கேரக்டர் சமீபகாலமாக பாசிட்டீவாகி விட்டது. அதனால் முன்பு என்னை திட்டிய நேயர்கள்கூட இப்போது உங்களை மாதிரி ஒரு பெரியப்பா எங்களுக்கு இல்லையே என்கிற ஏக்கத்தை இந்த கேரக்டர் ஏற்படுத்துவதாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு செண்டிமென்டான கேரக்டராக மாறியிருக்கிறது. அதேபோல் கல்யாண பரிசு சீரியலில் பாசிட்டீவான முக்கியத்துவம் வாய்ந்த ரோலில்தான் நடித்து வருகிறேன்.
குறிப்பாக, ராதிகா மேடத்துடன் நடிக்கும்போது மனதளவில் ஒருவித பயம் இருந்து கொண்டேயிருக்கும். அது மரியாதை கலந்த பயம்தான். அவர் ஒரு சீனியர் நடிகை என்பதால் அவருடன் நடிக்கும்போது தவறு செய்து விடாமல் சரியாக நடித்து விட வேண்டும் என்பதினால் ஏற்படும் பயம்தான் அது. அதன்காரணமாக, மற்ற காட்சிகளில் நடிக்கும்போது கேமரா முன்பு சென்ற பிறகுதான் டயலாக் பேப்பரை பார்ப்பேன். ஆனால் ராதிகா மேடத்துடன் நடிக்கும் காட்சிகள் என்றால் முன்பே உதவி இயக்குனர்களை அழைத்து டயலாக் பேப்பரை வாங்கி படித்துப்பார்த்துக் கொண்டு என்னை தயார்படுத்திக்கொள்வேன். அதோடு, மேடம் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாலே வாத்தியார் வகுப்பறைக்குள் வந்ததும் மாணவர்கள் கப்சிப்பென்றாகி விடுவது போல் நாங்கள் அமைதியாகி விடுவோம். அவர் நடித்து விட்டு சென்றதும் பயம் நீங்கி ஜாலியாகி விடுவோம்.
முன்பெல்லாம் சீரியல்களில் பெண்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஒரு பெண், ஆணையோ அல்லது பெண்ணையோ கத்தியால் குத்தி பழிவாங்குவது போல் எல்லாம் காட்சிகள் வைத்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. அது யதார்த்தமாக இருக்காது என்பதால், அந்த மாதிரியான காட்சிகளுக்கு ஆண்களையே பயன்படுத்துகிறார்கள். அதனால் தற்போது சீரியல்களில் நடிகர்களுக்கான முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது.
மேலும், சமீபகாலமாக இந்தி சீரியல்கள் தமிழ்நாட்டுக்குள் வருவது அதிகரித்துள்ளது. என்னைக்கேட்டால் இந்தி சீரியல்கள் நிலைக்க முடியாது. அது நம் முடைய கலாச்சாரத்தை மீறிய கதைகளில் தயாராகின்றன. அந்தவகையில், நம் முடைய தமிழ் சீரியல்கள் நமது அம்மா சமைக்கும் அறுசுவை உணவுகள் என் றால், இந்தி சீரியல்கள் பீட்சா பர்ஹர் மாதிரியானவை. அவை புதிதாக இருப்பதால் ஒருநாள் அல்லது சில நாட்கள் வேண்டுமானால் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் வெறுத்து விடும். காரணம், இந்தி தொடர்களில் உடம்புக்கு சரியில்லாத கேரக்டர்கூட மேக்கப் போட்டுக்கொண்டு யதார்த்தத்தை மீறிதான் படமாக்கப்படும். ஆனால் நம்முடைய சீரியல்கள் அனைத்துமே யதார்த்தமானவை என்று கூறும் ஆண்ட்ரேவ் ஜேசுதாஸ், தொடர்ந்து ஜீ தமிழ், விஜய் டிவி தயாரிக்கும் சீரியல்களில் நடிப்பதற்கும் பேசி வருவதாக சொல்கிறார்.