ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் 5வது சீசனின் இறுதி முடிவு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் ஆன்ந்த் அரவிந்தாக்ஷ்ன் என்பவர் சூப்பர் சிங்கர் டைட்டில் மற்றும் 70 லட்சம் மதிப்புள்ள வீடும் பரிசாக பெற்றார். ஆனால் அவருக்கு முதல் பரிசு கொடுத்தது தவறு என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதோடு, புதுமுக பாடகர் பாடகிகள் பங்கேற்றும் அந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே சினிமாவில் பின்னணி பாடிய அரவிந்தாக்ஷ்னை பாட வைத்து அவருக்கு பரிசு கொடுத்ததை ஏற்க முடியாது என தொடர்ந்து விஜய் டிவிக்கு எதிரான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விஜய் டிவியினால் கலாய்க்கப்பட்ட நடிகை லட்சுமிராமகிருஷ்ணன் இதுபற்றி கூறுகையில், விஜய் டிவியில் முதல் பரிசு பெற்றுள்ள அரவிந்தாக்ஷ்ன் நான் இயக்கிய ஆரோகணம் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். அந்த வகையில், அவர் ஒரு தொழில்முறை போட்டியாளர் ஆவார். அறிமுக பாடகர்களே பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியில் ஒரு பின்னணி பாடகரை போட்டியாளராக்கியதை ஏற்க முடியாது.
அதோடு, புதியவர்களுடன் அனுபவசாலிகள் போட்டி போடும்போது புதியவர்கள்தானே பாதிக்கப்படுவார்கள். நம்பி அவர்களது ஷோக்களை பார்க்கிற மக்களை இப்படி ஏமாற்றலாமா? என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், அந்த நிகழ்ச்சி புதியவர்களுக்கானது என்பது தெரியாமல் நான்கூட அரவிந்தாக்ஷ்னுக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன் என்கிறார்.