ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பது பார்க்க எளிதாக இருந்தாலும் அது கடினமான வேலை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரியும். அப்படிப்பட்ட பணியை ஒரு பார்வையற்ற சிறுவன் மிக எளிதாகச் செய்து வருகிறான். அவன் பெயர் ராமானுஜன். பழனியை அடுத்துள்ள பாறைப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பழனியின் பெற்றோர் விவசாய கூலிகள். மகனை தொண்டாமுத்தூரில் உள்ள அரசு பார்வையற்றோர் பள்ளியில் படிக்க வைத்தனர். அங்கு விடுதியில் தங்கிருந்து படித்து வந்தான்.
பார்வையில்லா விட்டாலும் தொலைக்காட்சி செய்திகளை கேட்பது அவனுக்கு பிடித்த விஷயமாக இருந்திருக்கிறது. 30 நிமிட செய்தியை கேட்டுவிட்டு அதை அச்சு பிசகாமல் திருப்பி பேசிக் காட்டுவான். இந்த திறமைதான் அவனை இப்போது செய்தி வாசிப்பாளனாக்கி உள்ளது.