சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஜெயா தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிவரை ஒளிபரப்பாகி வரும் ஆன்மீக, மர்ம தொடர் அதே கண்கள். நிமோ புரொடக்ஷன் சார்பில் கே.பாலு தயாரிக்கிறார். மூன்று குடும்பங்களுக்குள் நடக்கும் மர்மமான விஷயங்களை காட்சிப் படுத்தி திரைப்படங்களுக்கு நிகரான விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கிறது. மகேஸ்வரி, பாரதி, பரத்கல்யாண், மித்ரன், சிவன் சீனிவாசன், சிவகவிதா, சாய்ராம், நேசன், வசந்த், வனஜா, தீபா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
தற்போது இதன் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி மாவட்டம் மாத்தாண்டத்தில் நடந்து வருகிறது. தொடர்குறித்து தயாரிப்பாளர் கே.பாலு கூறியதாவது:
இந்த தொடருக்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு ஆதரவு பெருகி உள்ளது. 50 எபிசோடுகள் ஒளிப்பரப்பாகி இருக்கும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கும் உயர்ந்திருக்கிறது. 300 எபிசோடுகளுக்குத்தான் திட்டமிட்டிருந்தோம். சேனல் நிர்வாகம் ஆயிரம் எபிசோடுகள் வரை கொண்டு வாருங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். எங்கள் நிறுவனத்தின் கதை இலாகா அதற்கேற்றார்போல கதையில் பல டுவிடஸ்டுகளை வைத்து ஸ்கரிப்ட் தயாரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.