14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
பான்இந்தியா படமான சலாரில் முதன்முறையாக பிரபாசுடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ளார் ஸ்ருதி.
இதையடுத்து அவர் அளித்த ஒரு பேட்டியில், டோலிவுட்டில் நான் ஜோடி சேராமல் இருந்த ஒரே ஹீரோ பிரபாஸ். அவருடனும் இப்போது இணைந்து விட்டேன். இந்த சலார் படப்பிடிப்பு செட்டில் பிரபாஸ் மிக பணிவுடன் நடந்து கொண்டார். அது எனக்கு அவர் மீது வியப்பினையும், மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரிடத்திலும் இயல்பாக பழகுவதோடு, செட்டில் நல்ல அதிர்வுகளை கொண்டு வரும் ஒருவர் என்றும் அந்த பேட்டியில் பிரபாஸ் பற்றி கூறியிருக்கிறார்.
அதோடு, சலார் படத்தின் தனது கேரக்டர் பற்றி தெரிவிக்காத ஸ்ருதிஹாசன், இந்த படத்தில் எனக்கு எந்த ஆக்சன் காட்சியும் கிடையாது. சலார் ஒரு அதிரடியான ஆக்சன் படமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.