ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
'செக்கச் சிவந்த வானம்' வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பிரபல நாவல் ஒன்றின் கதையை கருவாக வைத்து, புதிய படம் தயாரிக்கும் பணியில், இயக்குநர் மணிரத்னம் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே திட்டமிட்டு, ஏதோ ஒரு காரணத்தால் தள்ளிக் கொண்டே போன 'பொன்னியின் செல்வன்' கதையையே மீண்டும் மணிரத்னம் கையில் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் விக்ரம், சிம்பு, ஜெயம் ரவி ஆகியோரை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருக்கும் மணிரத்னம், அவர்கள் படத்தில் நடிப்பதற்கு முன், சம்பந்தப்பட்ட கேரக்டர்களில் நன்கு தயாராக வேண்டும் என்பதால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பொன்னியின் செல்வன் கதையை அனுப்பி படிக்கச் சொல்லி இருக்கிறார்.
பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இந்தப் படத்தை, அடுத்தாண்டு துவக்கத்தில் இருந்து துவங்கவும் மணிரத்னம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.