ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் விஷால் வீடு, மற்றும் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த டாக்குமெண்ட்டுகளை எடுத்துச் சென்றனர். அதை ஆய்வு செய்ததில் விஷால் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சேவை வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் விஷாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார். "கைது செய்ய நேரிடும்" என்று நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கைக்கு பிறகு, இரண்டு முறை கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீபதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டு வரியை செலுத்திவிட்டால் வழக்கு முடித்து வைக்கப்படும் என்றனர். அதை ஏற்க மறுத்த விஷால், தான் குற்றமற்றவன் என்று வழக்கை நடத்தி நிரூபிப்பேன் என்றார். இதைத் தொடர்ந்து வழக்கை தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறை விஷால் ஆஜராகவில்லை. ஆஜராகாத காரணத்தை விஷால் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை வருகிற ஜனவரி 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.