ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல தமிழ் எழுத்தாளர், நாவல் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன். திரைப்படத்திலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார். ஆல்பம், சண்டக்கோழி, அவன் இவன், சமர், சண்டக்கோழி 2, இடம் பொருள் ஏவல் உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.
ராமகிருஷ்ணன் முதலில் வசனம் எழுதியது ரஜினி நடித்த பாபா படத்திற்கு. அன்று முதல் அவர் ரஜினியின் நண்பராக இருக்கிறார். ரஜினி அடிக்கடி சந்தித்து பேசுவர்களில் ஒருவராக ராமகிருஷ்ணன் இருக்கிறார்.
இந்நிலையில், ராமகிருஷ்ணன் எழுதிய சஞ்சாரம் என்ற நாவலுக்கு 2018ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இது இலக்கிய உலகின் மிகப்பெரிய விருதாகும். அந்த விருதை பெற்ற தனது நண்பனை ரஜினி அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அவருக்கு எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருது பெற்ற சஞ்சாரம் நாவலை பரிசாக வழங்கினார்.