ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ரஜினி பேட்ட படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இசை வௌியீட்டு விழாவில் அவர் பேசியதாவது :
நாம எல்லாரும் கனவு காணுறது வழக்கம் தான். ஆனால் நான் காணாத ஒரு கனவு நடந்தது, அது தான் ரஜினியுடன் இணைந்து நடித்தது சந்தோஷமாக இருக்கிறது. அவர் கூட நடித்ததே பெரிய விஷயம். அவர் கேமரா முன் வந்து நின்றால், அவரை பார்கக நிறைய பேர் இருக்காங்க. ரசிகர்களுக்காக இப்போது வரை அவர் பொறுப்புடன் நடிக்கிறார். அவரைப் போல பொறுப்பான நடிகராக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
கார்த்திக் சுப்பராஜை ஷார்ட் பிலிம் பண்ணும் போதிலிருந்தே தெரியும். ஷார்ட் பிலிம்லயே நிறைய சஸ்பென்ஸ் வைப்பாரு, அடுத்தடுத்த காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும். இந்த படத்துலேயும் அதே மாதிரியான காட்சிகள் நிறையவே இருக்கும். கடைசி காட்சி வரை எல்லாரையும் பிரமிக்க வைப்பார். பேட்டை படத்திலும் எல்லாம் இருக்கு, கடைசி வரை சுவாரஸ்யம் இருக்கும்.
எப்பவுமே பெரிய ஆள எதிர்த்தால் தான் பெரிய ஆளாக முடியும். நான் படத்தில் வில்லன் தான்.
இவ்வாறு விஜய் சேதுபதி பேசினார்.