ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
டைரக்டர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் கதையை படமாக்கப்போவதாக நீண்டகாலமாக சொல்லிக்கொண்டு வருகிறார். இந்நிலையில், செக்கச்சிவந்த வானம் படத்தை அடுத்து மீண்டும் அவர் ஒரு மல்டி ஹீரோ படத்தை இயக்கயிருப்பதாகவும், அது பொன்னியின் செல்வன் கதை என்றும் கூறப்பட்டது. அதோடு அந்த படத்தில் விஜய், விக்ரம், சிம்பு ஆகியோர் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
ஆனால் தற்போது அந்த செய்திகள்அனைத்தையும் பொய்யாக்கும் வகையில், தான் இயக்கிய ராவணன் படத்தில் நடித்த சீயான் விக்ரமை வைத்து பொன்னியின் செல்வன் கதையை படமாக்க மணிரத்னம் முடிவெடுத்திருப்பதாக தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. விக்ரம் லீடு ரோலில் நடிக்க அவருடன் வேறு சில நடிகர்களும் நடிக்கிறார்களாம். விரைவில் இந்த படத்திற்கான வேலைகள் தொடங்கயிருப்பதாக கூறப்படுகிறது.