ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலும், நடிகர் ரஜினி நடிப்பிலும் உருவாகி இருக்கும் '2.0' படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதில், நடிகர் ரஜினி மற்றும் படத் தயாரிப்புக் குழுவினர் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர். இது குறித்து, படத் தயாரிப்புக் குழு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர் ரஜினிதான் இந்தியாவிலேயே பிசினஸ் வேல்யு உள்ள நடிகர் என்பது மீண்டும் '2.0' படம் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்தப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவழிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானதும், போட்ட பணத்தை தயாரிப்பு குழுவால் எடுக்க முடியுமா என பலரும் சந்தேகம் கிளப்பினர். ஆனால், படம், சென்னையில் மட்டும் முதல் நாளிலேயே 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததோடு, உலகம் முழுவதிலும் இருந்து வசூலான தொகை நூறு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. படத்தின் மொத்த வசூல் கட்டாயம் ஆயிரம் கோடி ரூபாயைக் தொடும்.
இவ்வாறு அத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.