ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் பிரசன்னா தற்போது முன்னணி தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு இணையதளத்தில் பலர் கிண்டலும், கேலியும் செய்து வருகிறார்கள். மீம்சும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒருவர், தனது டுவிட்டரில், "சிவகார்த்திகேயன் அற்புதமான தொகுப்பாளர். பிரசன்னாவுக்கு தொகுப்பாளராக அவ்வளவு திறமை இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பிரசன்னாவைத் தொகுப்பாளராகப் பார்ப்பது போரடிக்கிறது. அவர் ஒரு சுமாரான நடிகர். அதிகம் வெற்றிகள் பார்க்காதவர். சிவா, தமிழ் சினிமாவின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞரில் ஒருவர்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து பிரசன்னா கூறியது “அன்புள்ள நண்பருக்கு நான் தொகுத்து வழங்குவது போரடிக்கிறது என்றால், அப்படியே இருக்கட்டும். அதை நான் முழுநேர வேலையாகச் செய்யப் போவதில்லை. நான் சுமாரான நடிகர் என்றால், என்னை மேம்படுத்திக்கொள்ள இடமிருக்கிறது. நான் அதிக வெற்றிகளைப் பார்க்கவில்லை என்றால், வெற்றிபெற இன்னும் அவகாசம் உள்ளது. வெற்றியைச் சம்பாதிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் தேவைப்படும். வெறுப்பையும், அன்பையும் சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒருநாள் நான் உங்கள் அன்பையும் பெறுவேன்” என கூறியுள்ளார்.
பிரசன்னாவின் இந்த பதில் டிரண்டிங் ஆகியுள்ளதால் நெகிழ்ந்து போயிருக்கிறார் பிரசன்னா.