ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்ப்படங்களில் வட சென்னையை தவறாகச் சித்தரித்ததால், இனிமேல் துறைமுகத்துக்குள் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்கக் கூடாது என்று காசிமேடு துறைமுக மேலாண்மைக் குழுவிடம் மீனவர்கள் கோரிக்கை கடிதம் அளித்துள்ளனர்.
காசிமேடு துறைமுகத்தில் 6 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட வடசென்னை படத்தில் காட்சிகள் மற்றும் வசனங்கள் மூலம் அப்பகுதி மக்கள் பற்றி மோசமாக சித்தரிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும்கோபத்தில் இருந்தனர்.
இந்நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் சாம்பியன் படத்தின் படப்பிடிப்புக்காக துறைமுகத்துக்கு படக்குழுவினர் வந்தனர். அவர்களை உள்ளே நுழையவிட மறுத்த மீனவர்கள், அங்கே படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
வடசென்னை குறித்தும் மீனவர்கள் பற்றியும் தவறான விஷயங்கள் எதுவும் படத்தில் இல்லை என்று சுசீந்திரன் கடிதம் கொடுத்த பிறகே படப்பிடிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதுமட்டுமல்ல, சாம்பியன் படத்தில் வடசென்னை மக்களைத் தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இல்லை என்றும் படத்தில் வட சென்னை மக்கள் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை என்றும் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகே அப்பகுதி மக்கள் சமாதானமடைந்தனர். படப்பிடிப்பு நடத்தவும் அனுமதியளித்தனர். அதுமட்டுல்ல, கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக படப்பிடிப்பில் ஏதேனும் தவறான காட்சிகள் படமாக்கப்படுகிறதா என்றும் அப்பகுதி மக்கள் கண்காணித்துள்ளனர்.