ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் ஹீரோக்களுடன் டூயட் பாடும் ஹீரோயினாக வலம் வந்தவர், தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டராக வலம் வருகிறார்.
நயன்தாராவின் சொந்த மாநிலம் கேரளா. 1984-ம் ஆண்டு, நவ., 18ம் தேதி பிறந்த நயன்தாராவின் இயற்பெயர் டயானா மரியா குரியன். சிம்பு, பிரபுதேவா என நடிகர்களுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார். அதிலும் பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று, கடைசியில் அவரை விட்டு பிரிந்தார். தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் நெருக்கமாக உள்ளார். இருவரும் காதலித்து வருகின்றனர். ஆனால் வௌிப்படையாக இருவரும் சொல்லவில்லை என்றாலும், அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர்கள் காதலர்கள் என காட்டிக் கொடுக்கிறது.
எவ்வளவு தான் சர்ச்சைகள் வந்தாலும் இன்றைக்கு தென்னிந்திய மொழிகளில் நம்பர் 1 நடிகையாக, ரூ.3 கோடிக்கும் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார். அறம், இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா என தொடர்ந்து ஹீரோயின் தொடர்புடைய கதைகளாக, வித்தியாசமான படங்களை கொடுத்து வருகிறார்.
இன்று, இவர் தனது 34வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விக்னேஷ் சிவன், தனது டுவிட்டர் பக்கத்தின் டிபி போட்டோவில் நயன்தாராவின் படத்தை வைத்திருக்கிறார். தொடர்ந்து சமூகவலைதளங்களில் #HBDNayanthara #HBDLadySuperStarNayanthara என்ற ஹேஷ்டாக்குளை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர் ரசிகர்கள். நயன்தாராவின் பிறந்த நாளை மிக பிரமாண்டமாக கொண்டாடினார்.