விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
ரகுமான் நடித்த 'துருவங்கள் 16' படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்தவர் கார்த்திக் நரேன். அப்படத்திக் வெற்றியைத் தொடர்ந்து அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா இணைந்து நடித்துள்ள 'நரகாசூரன்' படத்தை இயக்கினார்.
கார்த்திக் நரேனுக்கு தெரியாமல் நரகாசூரன் படத்தின் ஏரியாக்களை விற்று அதன் தயாரிப்பாளர்களில் ஒருவரான கவுதம் மேனன் பணத்தை வாங்கியதால் தற்போது சிக்கலில் மாட்டிகொண்டுவிட்டது நரகாசூரன் படம். கவுதம்மேனன் செய்த குளறுபடியினால் நரகாசூரன்' படம் எப்போது வௌிவரும் என்றே தெரியவில்லை.
இதற்கிடையில் நாடகமேடை என்ற படத்தை ஆரம்பித்தார் கார்த்திக் நரேன். அந்தப்படத்துக்கு பைனான்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் வேறுவழியில்லாமல் அந்தப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டார். எடுத்த படமும் வெளிவராமல், புதிய படமும் எடுக்க முடியாமல் கடும் மன உளைச்சலில் இருந்தாராம் கார்த்திக் நரேன்.
அவருடைய நிலையைக்கண்டு வருத்தப்பட்ட அரவிந்த்சாமி, கார்த்திக் நரேனை அழைத்து மீண்டும் கால்ஷீட் கொடுத்துள்ளார். மீண்டும் அரவிந்த்சாமி - கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது. தற்போது இதற்கான படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கார்த்திக் நரேன்.