ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சென்னை, அடுக்குமாடி குடியிருப்பில், அதிகாலை புகுந்த விஷால், சுவர் ஏறி குதித்து ஓடியது ஏன்? என, பெண் ஒருவரின் முகநுால் பதிவு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையுலகில், மீ டூ பாலியல் விவகாரத்தில், நம்ப முடியாத பலர் மீது, புகார் கிளப்பியது. கவிஞர் வைரமுத்து, நடிகர்கள் அர்ஜுன், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், இயக்குனர்கள், ஏ.ஆர்.முருகதாஸ், சுசி கணேசன் என பலர் மீது, குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும், பெண் கலைஞர்களுக்கு பாதுகாப்பு தரும் வகையில், பாதுகாப்பு குழு அமைக்கவும், நடிகர் சங்க பொதுச் செயலர், விஷால் உறுதி அளித்திருந்தார்.
இந்நிலையில், விஷால் மீது, பெண் ஒருவர் பரபரப்பு புகார் கூறியுள்ளார். விஸ்வதர்ஷினி என்ற அப்பெண், அவரது முகநுால் பதிவில், சென்னை, கோபாலபுரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடிக்கு, அதிகாலை, 2:00 மணிக்கு வந்த நடிகர் விஷால், இரண்டு மணி நேரம் கழித்து, 4:00 மணியளவில், பின்வாசல் வழியாக, சுவர் ஏறி குதித்து ஓடினார். அந்த நேரத்தில், விஷால் ஏன் வந்தார்; பின்வாசல் வழியாக ஓடியது ஏன் என, கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் சிசிஎல்., அவர் செய்த அட்டகாசங்கள் ஏராளம். இவை எல்லாவற்றுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டு கூறி உள்ளார்.