பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
இரண்டு தேசிய விருதுகளை பெற்ற நடிகை அர்ச்சனா. வீடு, சந்தியாராகம், தாசி, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி உள்பட பல படங்களில் நடித்தார். மிகச்சிறந்த நடிகை என்று போற்றப்பட்டாலும் குறைவான படங்களிலிலேயே நடித்தார். தென்னிந்திய மொழிகளில் 30 படங்களுக்குள் தான் நடித்திருப்பார்.
கமர்ஷியல் படங்கள், தனக்கு பிடிக்காத படங்களில் நடிப்பதில்லை என்ற பாலிசி வைத்திருப்பதால் தொடர்ந்து நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பரட்டை என்கிற அழகு சுந்தரம் படத்தில் தனுசின் அம்மாவாக நடித்தார். அந்த படம் வெற்றி பெறாததால் மீண்டும் சினிமாவை விட்டு விலகி இருந்தார். ஒன்பது ரூபாய் நோட்டு படத்தில் சிரமப்பட்டு நடித்தார். அதற்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர் நடித்தும், இணைந்து தயாரித்தும் உள்ள அழியாத கோலங்கள் இரண்டாம் பாகம் பணிகள் முடிந்தும் வெளிவராமல் இருக்கிறது.
இந்த நிலையில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளார். அதாவது 80 வயதான நாடக நடிகர் ஆதிமூலத்தின் மனைவி லட்சுமியாக நடித்துள்ளார். இதில் அர்ச்சனாவின் நடிப்பு பேசப்படுவதாக இருக்கும் என்கிறார்கள். மீண்டும் தீவிரமாக நடிப்பது என்று முடிவெடுத்துள்ள அர்ச்சனாவின் அடுத்த ரவுண்டை சீதக்காதி தொடங்கி வைப்பாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியவரும்.