ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
நடிகர் அர்ஜூன் மீது நடிகை ஸ்ருதி ஹரிகரன் பாலியல் புகார் கூறியிருந்தார். இந்த புகாரை மறுத்த அர்ஜூன், ஸ்ருதி ஹரிகரன் மீது 5 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். அர்ஜூன் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஸ்ருதி ஹரிகரன் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவருமே காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினையை மாநில மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஆணையத்தின் முன் விசாரணைக்கு வரும்படி ஸ்ருதி ஹரிகரனுக்கு சம்மன் அனுப்பியது. அதன்படி நேற்று மகளிர் ஆணையத்தின் முன் ஆஜரான ஸ்ருதி ஹரிகரன், அர்ஜூனுக்கு எதிராக வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மகளிர் ஆணையத்திடம் என் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறியுள்ளேன். பாலியல் புகாருக்கு தேவையான வீடியோ, ஆடியோ ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். அதனால் அதனை வெளியிடவோ, அது பற்றி பேசவோ முடியாது. எனக்கு தகுந்த நீதி கிடைக்கும். என்றார். மகளிர் ஆணையம் விசாரணைக்கு வருமாறு அர்ஜூனுக்கும் சம்மன் அனுப்பி உள்ளது.