ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினமாவில் இரண்டாவது ஆட்டத்தை தொடங்கி உள்ள நடிகை ஜோதிகா, கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் படங்களை தொடர்ந்து அவரது நடிப்பில் நவ., 16-ல் காற்றின் மொழி ரிலீஸாகிறது.
இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் தனது அடுத்தப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் ஜோதிகா. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை, ராஜ் என்கிற புதியவர் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று(நவ., 14) பூஜையுடன் ஆரம்பமானது. ஜோதிகா, சிவகுமார், சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஜோதிகா, பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். டீச்சர் வேடம் ஜோதிகாவிற்கு புதிதல்ல, ஏற்கனவே சூர்யாவின் காக்க காக்க படத்தில் நடித்திருக்கிறார். ஆனால் அந்தப்படத்தை விட இந்தப்படத்தில் இவரது கேரக்டர் வலுவானதாக அமைக்கப்பட்டுள்ளதாம்.