மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
விஜய் ஆண்டனி ஜோடியாக திமிருபுடிச்சவன் படத்தில் நடித்திருக்கிறார் நிவேதா பெத்துராஜ். ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமாகி, டிக் டிக் டிக் படத்தில் ஜெயம்ரவி ஜோடியாக நடித்தார், ஜெகஜாலகில்லாடியில் விஷ்ணு விஷால்,, பொன் மாணிக்கவேலில் பிரபுதேவா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். திமிரு புடிச்சவன் படத்தின் புரமோசனுக்காக வந்திருந்தவர் மீ டூ பற்றி கூறியதாவது:
நான் துபாயில் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போது அதை நினைத்துப் பார்த்தால் என் மீதுதான் தவறு இருக்கிறது என்பதை உணர்கிறேன். வேலை முடிந்ததும் வீட்டுக்கு போகாமல் பிரண்ட்டு கூப்பிட்டார் என்பதற்காக பார்ட்டிக்கு போனதால்தானே அதை நான் சந்திக்க வேண்டியது வந்தது. அதை நான் தவிர்த்திருக்கலாம்.
பாலியல் தொல்லை வரும்போது அதை நாம் தடுத்து நிறுத்தி விடவேண்டும். எனக்கு இதெல்லாம் பிடிக்காது, என்கிட்ட இது மாதிரி நடந்துக்காதீங்க, என்று முகத்துக்கு நேராக கூறிவிட்டால் எதுவும் நடக்காது. அதைவிட்டுவிட்டு பல வருடங்களுக்கு பிறகு சொல்வதால் சம்பந்தப்பட்டரின் குடும்பம் பாதிக்கப்படும். அவர் இப்போது மாறி இருக்கலாம். நல்ல வாழ்க்கை வாழலாம் அதை கெடுக்க கூடாது.
உதாரணத்துக்கு நான் மாடலாக இருந்தபோத கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் நடிகை எனக்கென்று பொறுப்பு இருக்கிறது. இப்போது அப்படி போஸ் கொடுக்க சொன்னால் கொடுக்க மாட்டேன். காரணம் நான் மாறிவிட்டேன். இப்போது அந்த பழைய போட்டோவை நெட்டில் போடும்போது மனசு கஷ்டப்படுகிறது. இப்படித்தான் பல வருடங்களுக்கு பிறகு மீ டூ வை சந்திக்கிற ஆண்களுக்கு இருக்கும் என்றார்.