ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
''பெரிய நடிகையரும், பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களால், தைரியமாக வெளியே சொல்ல முடியவில்லை,'' என, நடிகை வரலட்சுமி கூறினார்.
தற்போது, ஆண்களால் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படும் விஷயங்களை, 'மீ டூ' என்ற பெயரில், 'டுவிட்டர்' தளத்தில், பெண்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு முன்னரே, இதற்காக, 'சேவ் சக்தி' என்ற அமைப்பை, நடிகை வரலட்சுமி உருவாக்கியுள்ளார்.
'மீ டூ' விவகாரம் குறித்து, அவர் அளித்த பேட்டி:
சமூகத்தில், எந்த அளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அவர் தப்பு செய்தால், தப்பு தான். பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், நிச்சயமாக நான், அவர் பக்கம் இருப்பேன். விளம்பரத்திற்காக, அவர் பேசியதாக நான் நினைக்கவில்லை. பெண்கள், இந்தளவு இறங்கி வந்து, புகார் தெரிவிப்பதால், நிச்சயம் பொய் இருக்காது.
திரைத் துறையிலும், பாலியல் தொல்லை நடந்து வருகிறது. அது, இனியும் நடக்கக் கூடாது என்பதால் தான், இதுபோன்ற கதைகள் வெளியே வருகின்றன. இத்தகைய சம்பவங்கள், உங்களுக்கு நடந்தால் தான், அதன் வலி புரியும் வெளியே வந்து பேசியவர்களை பாராட்டுகிறேன். அவர்களை கேள்வி கேட்பது சுலபம்; பதில் சொல்வது கடினம். அவர்களுக்கு, நாம் உதவி செய்ய வேண்டும்.
பெரிய நடிகையர் எல்லாம், தமக்கு இதுபோல் நடக்கவே இல்லை என கூறியிருப்பது, அபாண்டமான பொய். எனக்கே பல கதைகள் தெரியும். அவர்களது சினிமா வாழ்க்கைக்கு, பாதிப்பு ஏற்படும் என்பதால், சொல்ல பயப்படுகின்றனர். பாதிக்கப்படுபவர்கள், ஏன் வெட்கப்பட வேண்டும்; குற்றவாளிகள் தான் வெட்கப்பட வேண்டும். இப்போது பேசாவிட்டால், எப்போதும் பேச முடியாது. இந்த நிலை மாற வேண்டும்.
எனக்கு கூட, 'அட்ஜஸ்ட்' செய்ய சொல்லி வந்த சில சினிமா வாய்ப்புகளை, என் மேலாளர் மறுத்துள்ளார். 'அந்த மாதிரி வரலட்சுமி இல்லை' என, என் மேலாளர், தைரியமாக கூறி மறுத்து விட்டார்.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, 'செக்ஸ்' கல்வி குறித்து, வெளிப்படையாக பேச வேண்டும். வீட்டில், செக்ஸ் கல்வி குறித்து, கூச்சமின்றி பேச வேண்டும்; கூச்சத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு, வரலட்சுமி கூறினார்.