ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடைக்குட்டி சிங்கம் படத்தை அடுத்து கார்த்தி நடித்து வரும் படம் தேவ். ரஜத் ரவி சங்கர் இயக்கும் இந்த படத்தில் ரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்து வந்தபோது மழை, நிலச்சரிவு காரணமாக அங்கு போடப்பட்டிருந்த செட் உள்ளிட்டவை அடித்து செல்லப்பட்டன. அதையடுத்து அங்கிருந்து படக்குழுவினர் பாதுகாப்பாக சென்னை திரும்பினர். அந்த வகையில், குலுமணாலியில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் தேவ் படக்குழுவுக்கு ரூ.1.5 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பை தொடர தற்போது கார்த்தியின் தேவ் படக்குழு புனேயில் முகாமிட்டுள்ளது. குலுமணாலியில் படமாக்க முடியாத முக்கிய காட்சிகள் புனேயில் தான் படமாகிறதாம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த தேவ் படத்தை டிசம்பரில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.