ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
'அறம்' படத்தின் மூலம் திரையுலகினரை மட்டுமல்ல ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் கோபி நயினார். நயன்தாரவை வைத்து 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார், அப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து சித்தார்த்தை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் என்று தகவல் வெளியானது.
பின்னர் அப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கிறார் என்றும், அதன்பிறகு ஆர்யா நடிக்கிறார் என்றும் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின. கோபி நயினார் அடுத்து இயக்கும் படத்தின் ஹீரோவாக ஜெய் நடிக்கிறார் என்றும், இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார் என்றும் இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கவிருந்தநிலையில் என்ன காரணத்தினாலோ ஆரம்பமாகவில்லை. பெப்சி தொழிலாளர்கள் பணிபுரியவில்லை என்று தகவல் அடிபடிகிறது.