ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சமீபத்தில் வெளிவந்த மேற்கு தொடர்ச்சி மலை படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனை விஜய் சேதுபதி தயாரித்திருந்தார், லெனின் பாரதி இயக்கி இருந்தார். தற்போது இதே பாணியில் மரகதகாடு என்ற படம் தயாராகி உள்ளது.
அஜய், ராஞ்சனா, ஜெயஸ்ரீ என்ற புதுமுகங்களுடன் மலைப் பகுதி மக்களே நடித்துள்ளனர். மங்களேஸ்வரன் இயக்கி உள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார். ஜெய் பிரகாஷ் இசை அமைத்துள்ளார், நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் மங்களேஸ்வரன் கூறியதாவது:
காடுகளை அழித்து காட்டு மக்களை அங்கிருந்து விரட்டியடித்து காட்டை சுடுகாடாக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கு எதிரான படம் இது. காட்டு மக்களை அவர்கள் விருப்பம்போல் அவர்கள் இடத்தில் வாழ அனுமதிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தும் படம். தற்போது காட்டு மக்கள் அனுபவித்து வரும் கொடுமைகளை ஒரு நிஜ சம்பவத்தின் பின்னணில் சொல்கிறோம். ஒரு சிலரைத் தவிர மற்ற கதை மாந்தர்கள் அனைவருமே காட்டு மக்களே. அடர்ந்த காடுகளில், காட்டு மக்களோடு தங்கி, அவர்கள் கொடுத்த உணவையே உண்டு வாழ்ந்து படமாக்கி இருக்கிறோம். கர்ணம் தப்பினால் மரணம் என்கிற அளவிற்கான பள்ளத்தாக்குகள், பாய்ந்தோடும் காட்டாறுகள் இவற்றில் உயிரை பணயம் வைத்து படமாக்கி உள்ளோம். என்றார்.