ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன், பாலைவன பறவைகள், பட்டிக்காட்டு தம்பி, பாட்டாளி மகன், புடிச்ச மாப்பிள்ளை, இரவு சூரியன், இதுதாண்டா சட்டம் உள்பட 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் செந்தில் நாதன். தற்போது தடா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
செந்தில்நாதன், சொந்தமாக சில படங்கள் தயாரித்த வகையில் பெரும் கடன் சுமை ஏற்பட்டிருப்பதாகவும், உடல்நலம் குறைந்து மருத்துவ செலவுக்குகூட பணம் இன்றி காஞ்சிபுரத்தில் சந்நியாசி போன்று சுற்றித் திரிவதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியானது. இதுகுறித்து தற்போது செந்தில்நாதன் விடுத்துள்ள விளக்க அறிக்கை வருமாறு :
நான் சினிமாவில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் பல வருடங்களாக பணியாற்றி வருகிறேன். வருடத்துக்கு பத்து படங்கள் கூட இயக்கி இருக்கிறேன். என்னைப் பற்றி ஒரு கிசுகிசுகூட வந்ததில்லை. ஆனால் இப்போது என்னை பற்றி நம்ப முடியாத அளவிற்கான செய்திகள் எப்படி வருகிறது என்றே தெரியவில்லை அதற்கு காரணம் என்ன என்றும் தெரியவில்லை.
இந்த செய்திகளால் எனது குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதை பரப்பியவர்களால் மாற்ற முடியுமா? அதனால் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்படுங்கள்.
நான் எனது படமான தடாவின் பாடல் வெளியீட்டு விழாவை தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தலைமையில் வெளியிடும் ஏற்பாடுகளை செய்து வருகிறேன். விரைவில் பாடல் வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது.