விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
கன்னடத்தில் வெளிவந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் 'யு டர்ன்'. 2016ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை பவன்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தைப் பார்த்ததும் அதன் ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டு சமந்தா படத்தின் உரிமையை வாங்கியதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அவர் வாங்கவில்லை படத்தில் நடிக்க மட்டும் செய்கிறார் என பின்னர் தகவல் வெளியானது.
கன்னடத்தில் படத்தை இயக்கிய பவன்குமார் தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என அறிவிக்கப்பட்டது. அதனால், இரண்டு மொழிகளுக்கும் பொதுவான நடிகர்களை படத்தில் நடிக்க வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தனர். ஆதி, ராகுல் ரவீந்திரன் ஆகியோர் படத்தில் சமந்தாவிற்கு அடுத்த கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பொதுவாக தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரிக்கப்படும் படம் என்றால் அதில் ஏதாவது ஒரு மொழியில் மட்டும்தான் பல காட்சிகளை எடுப்பார்கள். சில காட்சிகளை ஒரே மொழியில் மட்டும் எடுத்து ரசிகர்களையும் ஏமாற்றுவார்கள். 'பாகுபலி' படங்கள் கூட அப்படி எடுக்கப்பட்ட படங்கள்தான். ஆனால், 'யு டர்ன்' படத்தை தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலுமே தனித் தனியாகப் படமாக்கியிருக்கிறோம் என படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள்.