அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
திமுக., தலைவர் கருணாநிதி மறைந்த அன்று, அவருக்கு அஞ்சலி செலுத்த முடியாத பல திரையுலக பிரபலங்கள், அவர் அடக்கம் செய்யப்பட்ட மெரினாவிற்கு சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பல பிரபலங்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் இன்று(ஆக., 11) நடிகை ஜெயசித்ரா, நடிகர்கள் தியாகராஜன் மற்றும் அவரது மகன் பிரஷாந்த் ஆகியோரும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தியாகராஜன், கருணாநிதியுடன் மூன்று ஆண்டுகள் நான் பயணித்து இருக்கிறேன், அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் ஏராளம் என்றார்.
தொடர்ந்து பேசிய பிரஷாந்த், கருணாநிதியின் பொன்னர் சங்கர் படத்தில் நான் நடித்தேன். அவருடைய படத்தில் நடித்ததை பெருமையாக நினைக்கிறேன். இன்று நம்முடன் அவர் இல்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.