ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
'பிரேமம்' மலையாளப் படத்தில் நடித்து தமிழ், தெலுங்கு ரசிகர்களையும் கவர்ந்த ஒரு நடிகையாக மாறினார் சாய் பல்லவி. அவர் நடித்து தெலுங்கில் வெளிவந்த “பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி' ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. தெலுங்கில் சாய் பல்லவிக்கு பெரும் ரசிகர் கூட்டம் உருவானது. இருப்பினும் சாய் பல்லவிக்குக் கிடைத்த புகழைத் தாங்கிக் கொள்ள முடியாத யாரோ ஒருவர் தொடர்ந்து அவருக்கு எதிராக சில சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சாய் பல்லவி தற்போது நடித்து வரும் தெலுங்குப் படமான 'படி படி லேச்சி மனசு' படத்தின் நாயகனான சர்வானந்த்துக்கும் அவருக்கும் இடையே படப்பிடிப்பில் பிரச்சினை என சர்ச்சையைப் பரப்பியுள்ளார்கள். ஆனால், படக்குழுவினர் இதை அடியோடு மறுக்கிறார்கள். யாரோ வேண்டுமென்றே சாய் பல்லவிக்கு எதிராக இப்படி ஒரு சர்ச்சையை வேண்டுமென்றே பரவ விடுகிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
ஏற்கெனவே, சாய் பல்லவிக்கும் அவருடன் நடித்த தெலுங்கு ஹீரோக்களான நானி, நாக சௌரியா ஆகியோருடன் பிரச்சினை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சாய் பல்லவி தற்போது தமிழில் 'மாரி 2, என்ஜிகே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.