ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்துள்ள மோகினி படம் வருகிற வெள்ளியன்று ரிலீஸாகிறது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது.
த்ரிஷா பேசியதாவது : மோகினியில், மோகினி மற்றும் வைஷ்ணவி என இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். முதன்முதலில் இரண்டு வேடங்களில் நடிக்கிறேன். காலையில் எழுந்து செய்திதாளை படித்தால் குழந்தைகளுக்கு நடக்கும் அநீதிகள் பற்றிய செய்தி தான் அதிகமாக உள்ளன.
மோகினி படத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளோம். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் வகையில் படத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன என்கிறார்.
இயக்குநர் மாதேஷ் பேசியதாவது : மோகினி படத்தை மிக பிரமாண்டமாக உருவாக்கியுள்ளோம். த்ரிஷா சிரமப்பட்டு நடித்திருக்கிறார். சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார்.
இது ஹாரர் படமாக இருந்தாலும் நிறைய உணர்வுப்பூர்வமான காட்சிகள் குடும்பத்தை கவரும் வகையில் இருக்கும். வழக்கமான ஹாரர் படமாக இருக்காது. இப்படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகள் லண்டனில் எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் வெளியாவது போல் ஆந்திரா, தெலுங்கானாவிலும் அதிக திரையரங்குகளில் வெளியாகுகிறது. படத்தில் சோட்டானிக்கரை கோவிலில் நாங்கள் கண்ட உண்மையான விஷயங்களை கிளைமாக்ஸ் காட்சியாக உருவாக்கியுள்ளோம் என்றார்.