ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
துல்கர் சல்மான், ரிது வர்மா நடித்து வரும் படம் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தேசிங்கு பெரியசாமி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் இசை அமைப்பாளர் யார் என்பதை அறிவித்துள்ளனர்.
கேரளாவில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'மசாலா காபி என்ற இசைக் குழுவினர் தான் 'கண்ணும் கண்ணும் கொள்ளைடித்தால்' படத்திற்கு இசை அமைக்கிறார்கள்! 2016-ல் வெளியாகி பரவலாக பேசப்பட்ட 'உறியடி' படத்தின் பாடல்களுக்கு இசை அமைத்தவர்கள் இவர்கள்தான் என்பது கூடுதல் தகவல். உறியடி படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் நடித்த 'சோலோ' படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கும் இவர்கள் இசை அமைத்தனர்.
'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' துல்கர் சல்மான் தமிழில் நடிக்கும் மூன்றாவது நேரடி தமிழ் படம் என்று விளம்பரம் செய்யப்பட்டாலும், மலையாளத்தில் எடுத்து தமிழில் டப் செய்யப்படுவதாகவே மீடியேட்டர்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது!