ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு ரசிகர்களுக்கு பாலாவை நன்றாக தெரியும். ஒல்லி உடம்பு சத்தமான பேச்சு, காமெடியான உடல் மொழி என கலக்குகிறவர்.
காரைக்கால் அருகில் உள்ள நெடுங்காடு என்ற கிராமம் தான் பாலா பிறந்த ஊர். இயல்பாகவே மிமிக்ரி திறமை உள்ள பாலா சின்ன சின்ன நிகழ்ச்சியில் பங்கேற்று மிமிக்ரி செய்து வந்தார். சின்னத்திரை நிகழ்ச்சி தயாரிப்பாளர் அமுதவாணன் இவரிடம் இருக்கும் திறமையை கண்டுபிடித்து விஜய் டி.விக்குள் அழைத்து வந்தார். தனது திறமையால் இப்போது சினிமாவில் காமெடி நடிகராகி விட்டார். அதுவும் விஜய் சேதுபதி படத்தில்.
பாலா கூறியதாவது: எங்கள் ஊரில் விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ரசிகர் மன்றம் வைத்து அதன் தலைவராக இருந்தேன். குறுகிய காலத்துக்குள்ளேயே அவரது படத்தில் நடிக்க வந்து விட்டேன். அமுதவாணன் அண்ணாவும், ராஜு அக்காவும் தான் இதற்கு காரணம். முதல் படத்திலேயே வெளிநாட்டுக்கெல்லாம் போய்விட்டு வந்து விட்டேன். என்றார்.