சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
தன் மகன் கவுதம் கார்த்திக்குடன் கார்த்திக் நடித்திருக்கும் மிஸ்டர் சந்திரமவுலி படம் வருகிற 6ந் தேதி வெளிவருகிறது. இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கார்த்திக் கூறியதாவது...
என் மகன் கவுதம் என்னிடம் இந்த கதையை சொல்லி பிடித்திருந்தால் நடியுங்கள் என்று சொன்னான். தலைப்பே என்னுடையது என்பதால் உடனே பிடித்தது. கதை கேட்டேன். வழக்கமான அப்பா மகன் கதையாக இல்லாமல் வித்தியாசமாக இருந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். நல்ல கேரக்டர்களாக வந்தால் தொடர்ந்து நடிப்பேன். நான் நடிக்க விரும்பும் கனவு கேரக்டர் ஒன்று இருக்கிறது. அந்த கதையை நானே எழுதி உள்ளேன். அதை நானே இயக்கவும் செய்வேன். மூன்று கதைகள் என்னிடம் தயாராக உள்ளது.
இப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள். அரசியலில் நான் சீனியர் என்ற முறையில் அவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அரசியலுக்கு வந்தால் முழுநேர அரசயில்வாதியாக வாருங்கள். சினிமாவில் நடித்துக் கொண்டே அரசியல் செய்ய முடியாது. இப்போது நான் அரசியலை விட்டு விலகி நிற்கிறேன். அதற்கு காரணம் முழுநேர அரசியல்வாதியாக இல்லாமல் போனதுதான். நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அவர்கள் மூலமாவது நாட்டுக்கு நல்லது நடக்க வேண்டும். நானும் மீண்டும் அரசியலுக்கு வருவேன். முன்பை விட பலமாக, முழுநேர அரசியல்வாதியாக புறப்பட்டு வருவேன். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. என்றார் கார்த்திக்.