ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தனியொரு மனிதனாக அரசையும், அரசியல்வாதிகளையும் எதிர்த்து போராடி வருகிறவர் டிராபிக் ராமசாமி. நம் காலத்திலேயே வாழும் நிஜ ஹீரோ. அவரின் வாழ்க்கை கதை டிராபிக் ராமசாமி என்ற பெயரிலேயே தயாராகி உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார். அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். வருகிற 22ந் தேதி படம் வெளிவருகிறது.
இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் பேசிய இயக்குனரும், எஸ்.ஏ.சந்திரசேகரின் மாணவருமான ஷங்கர், தான் டிராபிக் ராமசாமியின் வாழ்க்யை ரஜினி நடிப்பில் இயக்க முடிவு செய்திருந்ததாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது:
இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினியை வைத்து படம் எடுக்க நினைத்தேன். எஸ்.ஏ.சி. நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம், இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க காத்திருக்கிறேன்" என்றார்.