ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2006-ல் கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. அதில் இருந்து இப்போது வரை கடந்த 12 ஆண்டுகளாக அவர் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். தற்போது அவர், கண்ணே கலைமானே என்ற தமிழ் படத்திலும், சைரா நரசிம்ம ரெட்டி, மகாலட்சுமி ஆகிய தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தமன்னா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கடந்த 12 ஆண்டுகளாக சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறேன். ஓய்வு என்பதே எடுக்கவில்லை. என்னைத்தேடி வந்த எல்லா படங்களையும் ஏற்றுக்கொண்டு வந்திருக்கிறேன்.
இனிமேல் எனக்கு பிடித்தமான படங்களில் மட்டுமே நடிக்கப்போகிறேன். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்குமிடையே இடைவெளி கொடுக்கப் போகிறேன். காரணம், எனக்கு சற்று ஓய்வு தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார் தமன்னா.