சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காமெடி நடிகர் சூரியும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்து அவர் கூறியுள்ள செய்தியில், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நம்முடைய தமிழர்களை இலங்கையில் சுட்டுக்கொன்றார்கள். அது பக்கத்து நாடு. ஆனால் இப்போது நம்முடைய நாட்டிற்குள்ளேயே அதுவும் நமக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய போலீசே தமிழர்களை சுட்டுக்கொன்றிருப்பது கொடுமையாக உள்ளது.
அவர்கள் என்ன கேட்டார்கள், சுவாசிக்க நல்ல காற்றைத்தானே கேட்டார்கள். கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் வருகிறது. இதிலிருந்து எதிர்கால சந்ததியை காப்பாற்ற வேண்டும் என்று தானே கேட்டார்கள். அதற்குகூட உரிமையில்லையா.
தண்ணீர் வேண்டுமானால் அண்டை மாநிலத்தில் வாங்கிக்கொள்ளலாம். காற்றை எங்கே போய் வாங்குவது. அப்படி சுவாசிக்க நல்ல காற்றை கேட்டவர்களை சுட்டுக்கொன்று அவர்களின் மூச்சுக்காற்றையே நிறுத்தினால் என்ன நியாயம் என்று தனது கருத்தினை வெளியிட்டுள்ளார் சூரி.