ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள பல நடிகர்கள், இயக்குனர்கள் தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு ஆறுதலாக நான்கு வார்த்தைகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், சமூகக் கருத்துள்ள படங்களை எடுப்பதாகச் சொல்லிக் கொள்ளும் இயக்குனர் ஷங்கர் நேற்று இரவு, ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றதை பற்றி டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
தமிழ்நாட்டில் உள்ள பலரும் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து வருத்தப்பட்டிருக்கும் நிலையில் ஷங்கரின் டுவீட் பலருக்கும் கோபத்தை ஏற்படுத்தியது.
பலர் அவருடைய பதிவின் கமெண்ட் பகுதியில் ஷங்கரின் பொறுப்பற்ற டுவீட்டுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். தூத்துக்குடியே பற்றி எரிந்து கொண்டிருக்கும் போது எப்படி ஒரு பதிவை போடுவீர்கள் என அவரைத் திட்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்த டுவீட்டிற்கு கடும் எதிர்ப்புகள் வந்ததை அடுத்து இயக்குனர் ஷங்கர் அந்த டுவீட்டை பின்னர் நீக்கிவிட்டார். அதோடு காலையில் தூத்துக்குடி உயிரிழப்புகளுக்காக வருந்துவதாக புதிதாக டுவீட் ஒன்றைப் போட்டார்.
நேற்றைய டுவீட்டிற்கு வாங்கிய அடி பலமா, அதனால் தான் இன்று வருத்தப்படுவதாக டுவீட் போட்டுள்ளீர்களா என அதற்கும் பதிலடி கொடுத்து வருகிறார்கள் ரசிகர்கள்.