ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அதர்வா அறிமுகமான பானா காத்தாடி படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ், 8 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கி இருக்கும் படம் செம போத ஆகாதே. அதர்வா தயாரித்து, நடித்திருக்கிறார். அவருடன் மிஸ்தி, அனைகா, ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். யுவன் இசை அமைத்திருக்கிறார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படம் வருகிற 18ந் தேதி வெளிவருகிறது. படம் பற்றி பத்ரி வெங்கடேஷ் கூறியதாவது:
படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது. செம போதையில் ஹீரோ செய்யும் ஒரு சின்ன தவறு அவரது வாழ்க்கையை புரட்டிப் போடுகிறது. அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை காமெடியாக சொல்லுகிற படம்.
போதையில் தான் தவறான முடிவெடுப்பார்கள். அந்த முடிவுகள் எத்தகைய ஆபத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை சொல்லுகிறோம். சின்ன சபலம் மொத்த வாழ்க்கையையும் திருப்பி போட்டுவிடும். ஐ.டி இளைஞர்கள் வாழ்க்கை பின்னணியில் செல்லும் கதை. ஆக்ஷ்ன், காமெடி, காதல், செண்டிமெண்ட் எல்லாம் கலந்த ஜாலியான படம், சின்ன மெசேஜும் இருக்கும். என்கிறார் பத்ரி வெங்கடேஷ்.