ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த இரும்புத்திரை படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்தது. படத்தில் ஆதார் கார்டு, ஏடிஎம், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி விமர்சிக்கப்படுகிறது. இது சில அரசியல் கட்சியினருக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர்கள் மிரட்டல் விடுத்து வருவதாக தெரிகிறது. விஷால் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கும் மிரட்டல்கள் வருவதால் பல தியேட்டர்களில் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இரும்புத்திரை திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று விஷால் நற்பணி இயக்கத்தின் செயலாளர் ஹரிகிருஷ்ணன் நேற்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது: இரும்புத்திரை படத்தில் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இருக்கிறது. ஆனால் ஆதார் திட்டத்துக்கு எதிராக உள்ளது என்று கூறி சில அமைப்புகள் மிரட்டி வருகிறது. படம் ஓடும் தியேட்டர்களுக்கும் மிரட்டல் விடுத்துள்ளார்கள். எனவே படம் ஓடும் தியேட்டர்களுக்கு தக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். என்று கூறப்பட்டுள்ளது.