ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு 'நடிகையர் திலகம்' என்கிற பெயரில் தமிழில் நேற்று வெளியானது.. சாவித்திரியாக கீர்த்தி சுரேஷும் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடித்துள்ளனர்.. இந்தப்படத்திற்கு சிரஞ்சீவி, மோகன்லால், ராஜமவுலி உள்ளிட்ட பல பிரபலங்களிடம் இருந்தும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.
குறிப்பாக சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் அந்த கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்க்கும்படியாக நடித்துள்ளார் என பலரும் குறிப்பிட்டுள்ளனர்.. இந்தநிலையில் நடிகர் கமலை சந்தித்து வாழ்த்தும், பாராட்டும் பெற்றுள்ளார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷை மற்றவர்கள் பாராட்டியதைவிட விட கமல் பாராட்டியது ரொம்பவே முக்கியத்துவம் பெறுகிறது..
காரணம், 1960-களில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான 'களத்தூர் கண்ணம்மா' படத்திலேயே சாவித்திரியின் மகனாக நடித்தவர் தான் கமல். அதனாலேயே சாவித்திரி, ஜெமினி இருவர் மீதும் தீராத அன்பு கொண்டவர். மேலும் பார்த்தால் பசிதீரும், பாதகாணிக்கை ஆகிய படங்களிலும் சாவித்திரியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.